84.18 F
France
April 19, 2025
இலங்கை

கொரோணாக்கு பிறகு மீண்டும் இலங்கை வந்த Air China விமானம்..!!

 

 

Air China விமான நிறுவனம் இலங்கையுடன் மீண்டும் விமான சேவையை ஆரம்பித்துள்ளது.

கொரோனா தொற்று காரணமாக சுமார் 3 வருடங்களுக்கு முன்னர்,  Air China  விமான நிறுவனம் இலங்கைக்கான விமானங்களை தற்காலிகமாக நிறுத்தியிருந்தது.

இந்நிலையில் மீண்டும் குறித்த விமான சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில் நேற்று இரவு விமானம் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தது.

முதலாவது விமானத்தை வரவேற்பதற்காக  இலங்கைக்கான சீனத் தூதுவர் கட்டுநாயக்க  விமான நிலையத்திற்கு வருகை தந்திருந்தார்.

இந்த விமானத்தில் 142 பயணிகளும் 9 விமான பணியாளர்களும் வருகை தந்துள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்திருந்தார்.

Air China விமான நிறுவனத்தின் நேரடி விமான சேவைகள் திங்கள், புதன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் இடம்பெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

மலையக புசல்லாவை மாணவி Zee Tamil சரிகம்ப நிகழ்ச்சியில் (வீடியோ)

News Bird

இன்று இந்த ராசிக்காரர்களுக்கு அதிஷடம்..…!

News Bird

சிம்பாப்வே நோக்கி மேலும் மூன்று இலங்கை வீரர்கள்

News Bird

Leave a Comment

G-BC3G48KTZ0