76.98 F
France
July 27, 2024
இலங்கை

மூன்று பிரதேசங்களுக்கு விசேட அதிரடிப்படை , இராணுவத்தினரின் பலத்த பாதுகாப்பு (வீடியோ)

அம்பலாங்கொடை, அஹுங்கல்ல, மெட்டியகொட பொலிஸ் பிரிவுகளில் பாதுகாப்பை பலப்படுத்தநடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதற்காக பொலிஸ், பொலிஸ் விசேட அதிரடிப்படை, கடற்படை மற்றும் இராணுவத்தினர்ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

தொடர் கொலைகள் மற்றும் ஏனைய குற்றச் செயல்கள் காரணமாக இந்த பாதுகாப்பு நடவடிக்கைகள்மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன்படி, புலனாய்வுப் பிரிவினர் மேற்கொண்ட சோதனையின் போது, போகஹவெல பிரதேசத்தில் உள்ளஊரகஸ்மன்ஹந்திய பிரதேசத்தில் உள்ள வெறிச்சோடிய வீடொன்றில் இருந்து பல இராணுவ சீருடைகள்கண்டெடுக்கப்பட்டுள்ளன.

இந்த வீட்டில் தற்காலிகமாக தங்கியிருப்பவர் இராணுவத்தில் இருந்து தப்பிச் சென்ற இராணுவ வீரர் எனதகவல்கள் வெளியாகியுள்ளன.

சந்தேக நபரைக் கண்டுபிடிப்பதற்கான விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதுடன், உரிய இராணுவசீருடைகள் ஊரகஸ்மன்ஹந்திய பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

 

Related posts

சர்ச்சைக்குரிய திலினி பிரியமாலிவிற்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு

News Bird

இன்று இரவு முதல் அமுலக்கு வரும் வகையில் 328 பொருட்கள் மீதான இறக்குமதி தடை நீக்கம்…!

News Bird

சமூக வலைதளங்களில் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிடுபவர்களுக்கு எதிராக கடுமையான சட்டம்

News Bird

Leave a Comment

G-BC3G48KTZ0