84.18 F
France
April 19, 2025
இலங்கை

மக்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு அரசாங்கம் முன்வரவில்லை- தேசிய மக்கள் சக்தி குற்றச்சாட்டு

மக்களின் உண்மையான பிரச்சினைகளை தீர்ப்பதற்கு அரசாங்கம் முன்வருவதில்லை என தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.

ஊடகமொன்றுக்கு வழங்கிய செவ்வியொன்றிலேயே அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

அத்துடன் மக்களின் பொருளாதார அசௌகரியத்தை வேறு விடயங்களினால் தூண்டிவிட அரசாங்கம் முயற்சிப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

சர்வதேச நாணய நிதியத்தினால் கிடைக்கப்பெறும் கடனுதவிகள் மூலம் பொருளாதார பிரச்சினைகளை நிவர்த்தி செய்ய முடியும் என அரசாங்கம் முன்னதாக உறுதியளித்திருந்தது.

இருப்பினும் பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு கிடைக்கப்பெற்ற போதிலும் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு தீர்வுகளை பெற்றுக் கொடுப்பதற்கு அரசாங்கம் முன்வரவில்லை எனவும் தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹரிணி அமரசூரிய குற்றஞ்சுமத்தியுள்ளார்.

Related posts

BREAKING NEWS : கொழும்பை அன்மித்த கடற்பரப்பில் நிலநடுக்கம்!

News Bird

வடக்கு மாகாணத்திலுள்ள அனைத்து வைத்தியசாலைகளிலும் அவசர சிகிச்சை பிரிவு

News Bird

‘ஜனாதிபதியை ஓரங்கட்டும் எண்ணம் எமக்கில்லை’

News Bird

Leave a Comment

G-BC3G48KTZ0