75.18 F
France
July 27, 2024
விளையாட்டு

16 ஆவது இந்தியன் பிரிமியர் லீக் தொடரின் இறுதிப் போட்டி இன்று

மழை காரணமாக கைவிடப்பட்ட 16 ஆவது இந்தியன் பிரிமியர் லீக் தொடரின் இறுதிப் போட்டி இன்று (திங்கட்கிழமை) நடைபெறவுள்ளது.

நேற்றைய இறுதிப் போட்டி சென்னை சுப்பர் கிங்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையே நடைபெற இருந்தது.

அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நேற்று மதியம் போட்டி தொடங்குவதாக இருந்தது, ஆனால் மழை பெய்ததால் போட்டி கைவிடப்பட்டது.

முன்னதாக நேற்றிரவு 9.40 மணியளவில் போட்டியை ஆரம்பிக்க முடியுமாயின் 20 ஓவர்கள் விளையாட முடியும் என்றும் போட்டி மேலும் தாமதமானால் ஓவர்கள் குறைக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது.

அதேநேரம், நள்ளிரவு 12.06க்கு முன்னதாக போட்டி ஆரம்பிக்கக்கூடிய சூழ்நிலை காணப்பட்டால், குறித்த போட்டி, 5 ஓவர்களுக்கு மட்டுப்படுத்தப்பட்டு இடம்பெறும் என அறிவிக்கப்பட்டது.

இந்தநிலையில் இந்தியன் பிரிமியர் லீக் தொடரின் இறுதிப் போட்டி இன்றிரவு 7.30க்கு ஆரம்பமாகவுள்ளமை குறிபிடத்தக்கது.

Related posts

டுபாயில் வீட்டு வேலை செய்யும் சர்வதேச போட்டிகளில் சாதனை படைத்த இலங்கை வீராங்கனை.!

News Bird

அதிரடி காட்டிய மேற்கிந்திய தீவுகள்

News Bird

முதலாவது டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி வெற்றி பெருமா..? பாகிஸ்தான் அணிக்கு வெற்றி இலக்காக நிர்ணயம்

News Bird

Leave a Comment

G-BC3G48KTZ0