79.09 F
France
May 18, 2025
இலங்கை

போதை விருந்தில் சிக்கிய பேஸ்புக் நண்பர்கள் : பொலீசார் அதிரடி சுற்றிவலைப்பு

பேஸ்புக் சமூக வலைத்தளத்தின் ஊடாக பன்வில, மடோல்கெலே பிரதேசத்தில் உள்ள ஹோட்டல் ஒன்றில் ஏற்பாடு செய்யப்பட்ட போதை விருந்தில் கலந்து கொண்ட 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பொலிஸ் அவசர அழைப்புப் பிரிவுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் பன்வில பொலிஸ் உத்தியோகத்தர்களால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே குறித்த சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டதாக குறிப்பிடப்படுகின்றது.

அந்த விருந்தில் 13 பெண்கள் உட்பட 112 பேர் கலந்து கொண்டிருந்த நிலையில் அவர்களை அதிகாரிகள் சோதனை செய்துள்ளனர்.

இதன்போது போதைப்பொருள் வைத்திருந்த 10 பேரும் விருந்தினை ஏற்பாடு செய்த இருவரும் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

அவர்களிடம் இருந்து பல்வேறு வகையான போதைப்பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டன.

சந்தேக நபர்கள் மாத்தறை, நாரம்மல, அம்பதென்ன, உக்குவலை, கம்பளை, நுவரெலியா மற்றும் பேராதனை ஆகிய பிரதேசங்களை வசிப்பிடமாக கொண்ட 21 மற்றும் 33 வயதுடையவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

அஸ்வெசும நலன்புரி திட்டத்திற்கு எதிராக கொழும்பில் ஆர்ப்பாட்டம்..! (வீடியோ)

News Bird

நீர் கட்டண உயர்வு தொடர்பான முழுமையான விபரம்.!

News Bird

பெண்களின் மேலாடை மற்றும் பச்சை சீருடை மற்றும் எலும்பு எச்சங்கள் : அச்சத்தில் மக்கள் !

News Bird

Leave a Comment

G-BC3G48KTZ0