75.18 F
France
July 27, 2024
இலங்கைசர்வதேசம்

கண்டி கடுகன்னாவையில் டென்மார்க் நாட்டு பெண் ஒருவரின் சடலம் மீட்பு!

கடந்த நான்கு நாட்களாக காணாமல் போயிருந்த டென்மார்க் நாட்டைச் சேர்ந்த பெண் ஒருவரின் சடலம் இன்று கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

கடுகன்னாவ பிரதேசத்தில் மலை ஏறச் சென்ற 32 வயதுடைய டென்மார்க் சுற்றுலாப் பெண் ஒருவர் கடந்த 10ஆம் திகதி முதல் காணாமல் போயிருந்தார்.

சம்பவம் தொடர்பில் கண்டி சுற்றுலா பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்திருந்தனர்.

அதன்படி, குறித்த வெளிநாட்டு பெண்ணின் சடலம் இன்று (14) கண்டெடுக்கப்பட்டுள்ளது.

மரணத்திற்கான காரணத்தை கண்டறிய மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அவர் செல்வதாக கூறிய பகுதியில் இந்த சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

மலை ஏறச் செல்வதாகக் கூறி ஹோட்டலில் இருந்து வெளியேறிய வெளிநாட்டுப் பெண் மீண்டும் விடுதிக்கு வரவில்லை என விடுதி உரிமையாளர் பொலிஸில் முறைப்பாடு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts

இலங்கையின் பிரதான நட்சத்திர உணவகத்தில் இந்திய தலைமை சமையல் கலை நிபுணர் கொலை!

News Bird

18,000 டொலருக்கு வாங்கப்பட்ட வியாஸ்காந்… (LPL 2023)

News Bird

ஹோட்டல் தொழிலில் களமிறங்கிய சுரேஷ் ரெய்னா

News Bird

Leave a Comment

G-BC3G48KTZ0