March 24, 2025
இலங்கை

யாழ்ப்பாணத்தில் 9 வயது மாணவியை மிருகத்தனமாக தாக்கிய அதிபர் கைது..!

யாழ்ப்பாணம் தீவக பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில் கல்வி கற்கும், 9 வயதான மாணவியை தாக்கிய குற்றச்சாட்டில் பாடசாலையின் அதிபரை ஊர்காவற்துறை பொலிஸார் இன்று (16) கைது செய்துள்ளனர்.

மாணவியை பாடசாலையில் வைத்து அதிபர் கடுமையாக தாக்கியதில் மாணவியின் உடலில் தழும்புகள் ஏற்பட்டுள்ளன.

குறித்த சம்பவம் தொடர்பில் மனிதவுரிமை ஆணைக்குழு விசாரணைகளை ஆரம்பத்துள்ள நிலையில், சம்பவம் தொடர்பில் மனிதவுரிமை ஆணைக்குழு பொலிஸாரிடம் வினவிய போது, தாம் அதிபரை கைது செய்து விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாகவும், நாளை (17) திங்கட்கிழமை ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றில் முற்படுத்தவுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

அதேவேளை குறித்த சம்பவம் தொடர்பிலான உத்தியோகபூர்வ விசாரணைகளை நாளை முன்னெடுக்கவுள்ளதாக மனிதவுரிமை ஆணைக்குழுவின் யாழ் பிராந்திய இணைப்பாளர் த. கனகராஜ் தெரிவித்துள்ளார்.

Related posts

மீண்டும் எகிறிய வாகன விலை – முழுமையான விலைப்பட்டியல் உள்ளே

News Bird

யாழ்பாணத்தில் தனியார் வகுப்புகளுக்கு தடை..!

News Bird

மன்னார் இளைஞர் யுவதிக்கு இலவச உடல் வலுவூட்டல் நிலையம்

News Bird

Leave a Comment

G-BC3G48KTZ0