76.98 F
France
September 8, 2024
இலங்கை

யாழ்பாணத்தில் தனியார் வகுப்புகளுக்கு தடை..!

யாழ்ப்பாணத்தில் வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய தினங்களில்  தனியார் வகுப்புகள் நடத்துவதற்கு  தடை விதிக்கப்பட்டுள்ளதாக யாழ் மாவட்ட செயலாளர் சிவபாலசுந்தரன் தெரிவித்துள்ளார்.

யாழ்.மாவட்ட சுகாதார அதிகாரிகள்,  பொலிஸார் , தனியார் வகுப்பு உரிமையாளர்கள், ஆசிரியர்கள் மற்றும் சிறுவர் அபிவிருத்தி உத்தியோகஸ்த்தர்களுடன் இடம்பெற்ற கலந்துரையாடலில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

இதன்படி, அடுத்த மாதம் முதலாம் திகதி முதல் இந்த தீர்மானம் நடைமுறைப்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தரம் 9 இற்கு கீழ் உள்ள வகுப்புகளுக்கு  குறித்த தினங்களில் தனியார் வகுப்புகள் முன்னெடுக்கப்படமாட்டாது  என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிறுவரிகளின்  மனநலம் கருதி இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது

.
இதேவேளை, ஒவ்வொரு தனியார் வகுப்புகளும் மாவட்ட செயலகத்தில் பதிவு செய்யப்பட  வேண்டும் என்றும் ஒவ்வொரு தனியார் வகுப்பிலும் பூரண சுகாதார வசதிகள் காணப்பட வேண்டும் எனவும் யாழ்.மாவட்ட செயலாளர் மேலும் தெரிவித்துள்ளார்.

Related posts

காலிக்கு அருகில் மீன்பிடி படகு தீ விபத்து : கடற்படையினர் அதிரடி..!

News Bird

Tiktok நிருவனத்தின் அதிரடி மற்றம்…!

News Bird

ஜனாதிபதியின் புதிய முயற்சி…

News Bird

Leave a Comment

G-BC3G48KTZ0