76.98 F
France
September 8, 2024
இலங்கை

நான்காவது மாடியிலிருந்து விழுந்து இளம் பெண் மர்ம மரணம்..!

யக்கல – போகமுவ பிரதேசத்தில் உள்ள வீட்டுத் தொகுதியின் நான்காவது மாடியில் இருந்து வீழ்ந்து பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

குறித்த வீட்டுத் தொகுதியில் வசித்து வந்த ஒரு பிள்ளையின் தாயான 31 வயதுடைய பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

குறித்த பெண் தனது கணவர் மற்றும் இவர்களுடைய 7 வயது மகளுடன் வாடகை அடிப்படையில் அங்கு வசித்து வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

உயிரிழந்த பெண்ணுக்கும் அவரது கணவருக்கும் இடையில் தொடர்ந்து தகராறுகள் இருந்து வந்துள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

எனினும் குறித்த பெண்ணின் மரணம் தற்கொலையா அல்லது கொலையா என்பதை கண்டறிய மேலதிக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

சம்பவம் தொடர்பில் பெமுல்ல பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

Related posts

கொழும்பு துறைமுக நகரில் செயற்கை கடற்கரை..! (Port City)

News Bird

இலங்கை உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் Whatsapp முற்றிலுமாக முடங்கியது..!

News Bird

நீர்கொழும்பில் தகாத உறவில் ஈடுபட்ட பெண்ணுக்கு காத்திருந்த அதிர்ச்சி!

News Bird

Leave a Comment

G-BC3G48KTZ0