76.98 F
France
July 27, 2024
விளையாட்டு

தாராவியிலிருந்து மகளிர் பிரீமியர் லீக் வரை சிம்ரன் ஷேக்கின் பயணம்

சிம்ரன் ஷேக், யு.பி.வரியர்ஸின் 21வயதான நடுவரிசை துப்பாட்ட வீரர் ஆவார், கிரிக்கெட்டில் அவரது உயர்வு பேசப்படும் விடயமாக உள்ளது. பல தடைகளை எதிர்கொண்டாலும், அவர் கிரிக்கெட் மீதான தனது ஆர்வத்தைத் தொடர்தமையால் தற்போது உயர்ந்துள்ளார்.

உண்மையில், அவர் குழந்தை பருவத்தில், பூங்காவில் கிரிக்கெட் விளையாடியதற்காக மக்களின் திட்டுக்களுக்கு இலக்காகியுள்ளார். ஆனால் அவர் அதனை அலட்சியப்படுத்திவிட்டு முன்னேறினார்.

சிம்ரனின் தந்தை ஜாஹித் அலியும், தாயார் அக்தாரி பானோவும், கூட அவர் இத்தகைய நிலையை அடைய முடியும் என்று ஆரம்பத்தில் நம்பவில்லை. சிம்ரன் 10ஆம் வகுப்புக்குப் பிறகு படிப்பை விட்டுவிட்டு, கிரிக்கெட்டைத் தொடர்ந்தார். இப்போது, ர் இந்தியாவில் நன்கு அறியப்பட்ட கிரிக்கெட் வீரராக தனது பெற்றோருக்கு பெருமை சேர்த்துள்ளார்

எவ்வளவு கடினமான சூழ்நிலை வந்தாலும், கனவுகளைத் தொடரும் மன உறுதி இருந்தால் எதையும் சாதிக்க முடியும் என்பதை நினைவூட்டுகிறது சிம்ரனின் கதை. கடின உழைப்பும் விடாமுயற்சியும் எந்த தடையையும் கடக்க உதவும் என்பதற்கு அவரது பயணம் ஒரு பிரகாசமான எடுத்துக்காட்டு.

சிம்ரனின் கடின உழைப்புக்கு பலன் கிடைத்துள்ளது, மேலும் அவரது நம்பிக்கை அதிகமாக உள்ளது. ஒரு நாள் இந்தியாவுக்காக விளையாடுவேன் என்று நம்புகிறார். எந்தப் பின்னணியில் இருந்தாலும், கடின உழைப்பு மற்றும் விடாமுயற்சியுடன் எவரும் தங்கள் கனவுகளை அடைய முடியும் என்பதற்கு அவரது கதை ஒரு சான்று.

சிம்ரன் ஷேக்கின் கதை இளம் கிரிக்கெட் வீரர்களின் தலைமுறைகளை அவரது அடிச்சுவடுகளைப் பின்பற்றவும், அவர்களின் கனவுகளை ஆர்வத்துடனும் அர்ப்பணிப்புடனும் தொடர ஊக்குவிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

சிம்பாப்வே நோக்கி மேலும் மூன்று இலங்கை வீரர்கள்

News Bird

16 பேர் கொண்ட இலங்கை அணி அறிவிப்பு

news

அதிரடி காட்டிய மேற்கிந்திய தீவுகள்

News Bird

Leave a Comment

G-BC3G48KTZ0