75.18 F
France
October 18, 2024
விளையாட்டு

ப்ளேஓவ் சுற்றுக்குள் நுழையப்போகும் 4ஆவது அணி எது? இன்று முக்கிய போட்டி 

2023 ஆம் ஆண்டுக்கான ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரின் ப்ளேஓவ் போட்டிக்கு குஜராத் டைட்டன்ஸ், சென்னை சுப்பர் கிங்ஸ், லக்னோ சுப்பர் ஜயன்ட்ஸ் அணிகள் தகுதி பெற்றுள்ளனர்.

இந்நிலையில் 4 ஆவதாக ப்ளேஓவ் சுற்றில் இணையவுள்ள அணியை தீர்மானிக்கும் இரு முக்கிய போட்டிகள் இன்று நடைபெறவுள்ளன.

பெங்களூர், ராஜஸ்தான் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் தலா 14 புள்ளிகளைப் பெற்றுள்ளன நிலையில் அந்த மூன்று அணிகளும் முறையே 4ஆம், 5ஆம், 6ஆம் இடங்களை பிடித்துள்ளன.

ராஜஸ்தான் அணிக்கு அனைத்து போட்டிகளும் முடிவடைந்துள்ள நிலையில் பெங்களூர் மற்றும் மும்பை அணிகளுக்கு தலா ஒரு போட்டி எஞ்சியுள்ளது.

இந்நிலையில் மும்பை அணி, ஹைதராபாத் அணியையும், பெங்களூர் அணி குஜராத் அணியையும் இன்று எதிர்கொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

மலையகத்தில் தொடர் சாதனை படைக்கும் வலப்பனை எமஸ்ட் தமிழ் வித்தியாலயம்

News Bird

ஆசிய கிண்ண டிக்கெட்டுக்களின் விலை குறைப்பு.!

News Bird

18,000 டொலருக்கு வாங்கப்பட்ட வியாஸ்காந்… (LPL 2023)

News Bird

Leave a Comment

G-BC3G48KTZ0