March 24, 2025
இலங்கை

அடுத்த வருடம் இலங்கையில் ஜனாதிபதி தேர்தல்….!

அடுத்த வருடம் ஜனாதிபதி தேர்தல் நடத்தப்படும் என ஜனாதிபதி தொழிற்சங்க பணிப்பாளர் நாயகம் சமன் ரத்னப்பிரிய தெரிவித்துள்ளார்.

இந்த ஆண்டு தேர்தல் நடைபெறாது என்றார்.

பதுளை பிரதேசத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்ட ஜனாதிபதியின் தொழிற்சங்கத்தின் பணிப்பாளர் நாயகம் சமன் ரத்னப்பிரிய இந்த கருத்துக்களை வெளியிட்டார்.

“இந்த ஆண்டு தேர்தல்கள் இல்லை. 2024 தேர்தல் ஆண்டு தேர்தல்கள் ஆண்டாக கருதப்படும். 2024 முதல் தேர்தல், ஜனாதிபதித் தேர்தலாக இருக்கும் என நாங்கள் உணர்கிறோம்.

அதற்கு இப்போது தயாராகி வருகிறோம். ரணில் விக்கிரமசிங்கவை 2024 ஆம் ஆண்டு மக்கள் ஆணை மூலம் ஜனாதிபதியாக்க வேண்டும் என்று நான் பரிந்துரைக்கிறேன்.

தற்போதைய அரசியல் தலைமையினால் இந்த நாட்டை உருவாக்க முடியாது என்று நாங்கள் வெளியே வந்து கூறினோம். பொதுவாக, உலகில் ஒரு நாடு வீழ்ச்சியடைந்தால், எதிர்க்கட்சித் தலைவர் அதனை பொறுப்பேற்பதே நியதி.

ஆனால் இலங்கையில் அதனை ஏற்றுக்கொள்ளும் முதுகெலும்பு உள்ள எதிர்க்கட்சித் தலைவர் இருக்கவில்லை. அவர் ஓடி ஒளிந்து கொண்டார். அதனால்தான் ஆசையும் பயமும் கலந்த ஒரு உணர்வு ஏற்பட்டது…”

 

Related posts

பொசன் பௌர்ணமி தினத்தையிட்டு 440 கைதிகள் விடுதலை (PHOTOS)

News Bird

பதுளையில் இருந்து கொழும்பு சென்ற பஸ் விபத்து : 15 பேர் வைத்தியசாலையில் (CCTV VIDEO)

News Bird

BREAKING NEWS :- டைட்டானில் சென்ற அனைவரும் இறந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது

News Bird

Leave a Comment

G-BC3G48KTZ0