84.18 F
France
March 12, 2025
இலங்கை

இலங்கை வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள எச்சரிக்கை – கடலலைகள் மேல் எழக்கூடும்

சீரற்ற வானிலை மற்றும் கடும் காற்று காரணமாக அவதானத்துடன் செயற்படுமாறு கடற்றொழிலாளர்களை வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.

இதற்கமைய, ஹம்பாந்தோட்டை முதல் பொத்துவில் வரையிலும், புத்தளம் முதல் மன்னார் வரையிலும், காங்கேசன்துறை ஊடாக திருக்கோணமலை வரையான கரையோரத்திற்கு அப்பால் உள்ள கடற்பகுதிகளில் மணித்தியாலயத்திற்கு 50 முதல் 60 கிலோமீற்றர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என அந்த திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

மன்னார் முதல் கொழும்பு வரையிலும், காலி மற்றும் ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கரையோரத்திற்கு அப்பால் உள்ள கடற்பகுதிகளிலும் கடலலை மேல் எழக்கூடும் எனவும் குறித்த கடற்பிராந்தியங்களில் கடற்றொழிலில் ஈடுபடுவர்கள் மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.

Related posts

உலகின் மிகவும் சக்திவாய்ந்த கடவுச்சீட்டுகளின் பட்டியலில் இலங்கையும் உள்ளதா..?

News Bird

வடக்கு கிழக்கு மாகண மக்களுக்கு கடவுச்சீட்டு தொடர்பில் விசேட அறிவிப்பு

News Bird

மலையகத்தில் 20 வயது இளைஞனுடன் உறவு வைத்திருந்த 41 வயது பெண்ணுக்கு நடந்த சம்பவம்

News Bird

Leave a Comment

G-BC3G48KTZ0