76.98 F
France
September 8, 2024
இந்தியாஇலங்கைசர்வதேசம்

கலவர பூமியாக மாறிய பிரான்ஸ் : பற்றி எரியும் தலைநகர் பாரிஸ் !! காவல்துறையினரின் அடாவடி (Video)

பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் காவல்துறையினரின் அறிவுறுத்தலை மீறி, காரை நிறுத்தாமல் ஓட்டிச்சென்ற 17 வயதான ஆபிரிக்க சிறுவன் காவல்துறையினரின் துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தமை பெரும் வன்முறையைஏற்படுத்தியுள்ளது.

IMG_6523.jpeg


பிரான்சின் பல்வேறு நகரங்களில் நேற்று இரவு இந்த வெறியாட்டங்கள் இடம்பெற்றுள்ளன. பொதுஇடங்களைத் தாக்கியும், மகிழுந்துகளை எரித்தும் வன்முறைகள் இடம்பெற்றன. குறிப்பாக Hauts-de-Seine மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளிலும், Asnières, Colombes, Suresnes (Hauts-de-Seine), Clichy-sous-Bois (Seine-Saint- Denis) மற்றும் Mantes-la-Jolie (Yvelines) நகரங்களிலும் வன்முறைகள் பதிவாகின.

மொத்தமாக 42 வாகனங்கள் எரியூட்டப்பட்டிருந்தன. 2,000 காவல்துறையினர் இரவு முழுவதும் பாதுகாப்பில்ஈடுபட்டனர்.
அதேவேளை, 24 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

 

Related posts

“நான்‌ ரணில் ராஜபக்க்ஷ அல்ல” தமிழ் கட்சிகளின் தலைவர்களுக்கு ஜானதிபதியின் பதில்!

News Bird

நான்காவது தடவையாக நடைபெறவுள்ள லங்கா பிரீமியர் லீக் ஏலம் நாளை ஆரம்பம்

News Bird

காலிக்கு அருகில் மீன்பிடி படகு தீ விபத்து : கடற்படையினர் அதிரடி..!

News Bird

Leave a Comment

G-BC3G48KTZ0